சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
ஞாயிறு, 6 அக்டோபர், 2013
மழை - சில குறிப்புகள்.
ஆகாயம் மேகத்தால்
மண்ணுக்கு இட்டது முத்தம்.
மழை.
மின்னல் வெட்டியதில்
கிழிபட்ட மேகத்தின் குருதி-
மழை.
விடாது பெய்வது
பிழையென்றாலும்
அதையும் சொல்கிறார்கள்
மழை.
பகலில் காண நேர்ந்தது
பேய் ரூபம்-
மழை.
ஓய்ந்து விட்டாலும்
ஒழுகியபடி தொடர்கிறது
ஓலைக் குடிசைக்குள்
மழை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக