செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

நிரா(லா)சை

சோறூட்டப் பட்டதும்
குழந்தைகள்
உறங்கப் போய்விடும்
உண்மைத் தெரியாமல்
விளையாட வருவார்கள்
என்றெண்ணி
ஒவ்வொருநாள் இரவும்
காத்திருந்து காத்திருந்து
ஏக்கத்தில்
இளைத்து தேய்ந்தது நிலா..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக