ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

ஆதலினால் காதல் செய்வீர் அகிலத்தோரே...

நீ புத்தகம் வாசிப்பதை
ரசித்து பார்ப்பேன்.
அதைவிட நான்
அதிகம் ரசிப்பது-என் மீது
நீ புகார் வாசிப்பதை..!!

சமயத்தில் மோர்சாதம்
போதுமென்பேன்.
வடித்தது வீணானதென்று
வெடித்து சிதறுவாய் நீ.
மோர் சாதத்திற்கு
மிளகாய் வற்றலாகி
சுவைகூட்டும் உன் கோபம்.

ஒவ்வொருமுறை என்மீது நீ
கோபப்படும்பொழுதும்
சுலபமாய் புரிந்துக் கொள்ளமுடிகிறது
என்னால்-அது
யார் மீதுள்ள கோபம் என்று..

ஒரேஒருமுறை நான்
கோபித்துக் கொண்டதுண்டு உன்னை.
சண்டைப் போடாமல் என்னோடு - ஒரு
'சண்டே'யை வீணடித்ததற்காக.

பழுத்த ஊடலே கோபம்-ஆதலின்
பொறுத்தால்
பெறலாம் பெரும் லாபம் .

காதல் நம்மை மீட்டும் வாத்தியம்.
காதலால் மட்டுமே எதுவும் சாத்தியம்.

ஆதலினால் காதல் செய்வீர் அகிலத்தோரே...
                                                                                                 -வா.சுகன்ப்ரியன்.
14/02/2013.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக