திங்கள், 11 பிப்ரவரி, 2013

காவ(த)ல் தேவதை

நினைவுகளின் வீதியில் நின்றிருந்தேன்.

என்றும்போல் அன்றும்
எனைக் கடந்தாய் பாராது.

சற்று தூரம் சென்ற நீ
திரும்பியபோது பரபரப்பானேன்.

எதேச்சையாய் பார்ப்பதுபோல்
என்னை பார்த்த போது
உன் பார்வையில் சிதறிய
உள் அர்த்தங்கள்
அப்போது புரியவில்லை.

காதலைத் தாண்டி நீ யோசித்த முதிர்ச்சி
எனக்கு தருகிறது
காலங்கள் தாண்டி இப்போது அதிர்ச்சி.

ஏதோ ஒரு ''தர்ம''புரியில்
ஏதோ ஒரு தர்மவானுக்கு
தர்மபத்தினியானவளே ...

அன்று நீ அடக்கிவைத்தது
உன் உள்ளக் காதலை மட்டுமல்ல-
நம் ஊர் கலவரத்தையுமல்லவா ...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக