பேடிகளுக்கு
மூளையில் பதிந்த பயம் தீரவில்லை.
பயத்தின் சுவடோ,அழுத தடமோ
பாலகனின் பளிங்கு விழிகளில் இல்லை.
உண்மையான வீரத்தின் ஆழமும்
உதயமாகப் போகும் தமிழ் ஈழமும்
பேடிகளின் கண்களுக்கு புலப்பட்டிருக்க வேண்டும்-
பாலகனின் பளிங்கு விழிகளில்.
தின்றிட ஏதோ அவனுக்கு தந்துவிட்டு
கொன்றிட அவனை ஆலோசனை நடத்திவிட்டார்கள்
அடுத்த அறையில்.
என்ன சொல்லி அழைத்து சென்றிருப்பார்கள் அந்தக்
குழந்தையை கொல்வதற்கு காடையர்கள்..??
''விளையாடலாம் வா'' என்றா..??
அட மடையர்களே..
அதிலும் தன் வீரமரணம் மூலம்
உங்களை மட்டுமல்ல
உலகத்தோர் உள்ளங்களையும் வென்றது அவன்தானே.
இந்த புகைப்படம் பார்த்து கற்றுக் கொள்-
எதிரிகளிடம் சிக்கினாலும் ''சிங்கிளா''
எப்படி இருப்பதென்பதை சிங்களா.
- வா.சுகன்ப்ரியன்.21/02/2013.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக