புதன், 13 பிப்ரவரி, 2013

சகோதரி வினோதினி. (ஒரு கருகிய கனவு.)

வாசித்தால் வேதனை மிஞ்சுது
  வஞ்சியவள் மரணச் செய்தியை.
நேசித்ததை மறுத்ததற்கு ஐயகோ
  நேர்ந்திட வேண்டுமோ இக்கொடுமை.
யோசித்தால் வழியுண்டு ஆயிரம்
  யோக்கியமாய் அவள் அன்புப் பெற,
யாசித்தும் பெற்றிடலாம் தவறில்லை
 யாரும் யாரிடத்தும் காதலை,
பூசிக்கவேண்டியப் பேரழகை இப்படி
  பொசுக்கி அழிக்க பேடியவன்
''ஆசிட்''டை அண்டிப் போவானா..?
   அவனும் நல்ல கதியில்தான் சாவானா..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக