செவ்வாய், 12 மார்ச், 2013

உருமாற்றம்

என் சொற்க(ல்)ள் உன்னை
காயப்படுத்தியதற்கு
மானசீகமாய் வருந்தி நான்
மடலொன்று எழுதியபோது-

வரிகளை அழித்து திருத்தியது
சிந்தியக் கண்ணீர்த் துளி-

மடலை ஓர்
சத்தியக் கவிதையாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக