புதன், 4 செப்டம்பர், 2013

இதழ்மீது ஓர் சயனம்.

புள்ளினம் கண்டு மானிடமா..
மானிடம் கண்டு புள்ளினமா..

துவக்கியது யாரென்று தெரியவில்லை.
துவங்கியது இன்னும் முடியவில்லை.

முத்தத்தில்
கொடுப்பவரே எடுப்பவராம்..
எடுப்பவரே கொடுப்பவராம்..
மொத்தத்தில்
காதல்ஜோதி அணையாதிருக்க
கடைசி வரை தரும் ''பவரா''ம்.

இது
காதல் வளர்க்கும் ஓர் வேள்வி.
இதில்லையேல்
அங்கு காதலே ஓர் கேள்வி.

விழிமூடி இதழ்மீது ஓர் சயனம்.
வழிதேடி புதுஉலகில் ஓர் பயணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக