புதன், 4 செப்டம்பர், 2013

கார்மேக கண்ணா..

நாதங்கள் குழலில் எழுப்பி இந்த
நானிலத்தை மயக்கிய நந்தா-உன்

பாதங்கள் வரைந்து நாங்களெதிர்
பார்த்திருந்தாலும் உன் வரவுக்காக

பேதங்கள் இல்லாப் பெருமழைப்
பொழியும் கருமேகமாகி- வரும்

மாதங்கள் எல்லாம் மனம்குளிர
மேலிருந்தே அருளிடுவாய் மாதவா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக