செவ்வாய், 3 செப்டம்பர், 2013

ஜாலம் செய்யும் காலம்.

முட்களிடை சிக்கியும்
கிழிபடாது காயங்களின்றி
நழுவும் காலம்.

உடன் விரையும் நமக்கு 
உண்டோ
"உள்ள"காயங்களின் கணக்கு ?.

விரைந்தபடியே காலம்
நம் வலிகளை
மறைக்கச் செய்யுது ஜாலம்.

கண்மூடித்தனமாய் விரையும்
காலம்
தீர்ப்புகளையும் வீசிச் செல்கிறது
திருத்தமாய்
யானைகளுக்கும்,பூனைகளுக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக