புதன், 4 செப்டம்பர், 2013

சுதந்திர நாள் சிந்தனை.

சுதந்திரம் பெற்று சுற்றித் திரிந்தோம்.
சுயமாய் சிந்திக்கக் கற்றோமா..?
வெள்ளையன் ஓட சுதந்திரம் பெற்றோம்.
வறுமையை விரட்டி பெற்றோமா..?
வியர்வை சிந்தி நாளும் உழைத்து
விதியிடம் வேதனை விற்றோமா..?
சிங்களன் சீனன் பாகிஸ்தான் காரன்
சீண்டிட கோபம் உற்றோமா..?
மொத்த இந்தியர் ஒற்றுமைக் காத்து
முதலிடம் உலகில் கைபற்றோமா..??


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக