சனி, 3 நவம்பர், 2012

என்றைக்குமான கேள்வி.

கவர்ச்சி சலுகைகளோடு ஆளும்கட்சி -எதையும்
கண்மூடி எதிர்க்கும் எதிர்க்கட்சி.

ஆலோசனைக்கூற இங்கு  ஆளில்லை.
ஒருவரை ஒருவர்
அர்ச்சித்து கொள்ளா நாளில்லை.

கூட்டணிக்கட்சிகள்  ஜோரா-அட
போட்டே ஆகணும் ஜால்ரா.

இவர் மட்டும் என்ன யோக்கியம். .
பெருக்கிக்கொண்டனர் சௌபாக்கியம்.

மாநிலக்கட்சிகளை குழையாது-இங்கு
தேசியக்கட்சிகளும் நுழையாது.

அரசியல் என்னும் சகதியால்
ஆகினர் எம்மக்கள் அகதியாய்.

மக்கள் சேவை மிகத்தூயப்பணி-அது
என்றாவது அவர்கள் தலையாயப்பணி??!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக