கண்மூடி எதிர்க்கும் எதிர்க்கட்சி.
ஆலோசனைக்கூற இங்கு ஆளில்லை.
ஒருவரை ஒருவர்
அர்ச்சித்து கொள்ளா நாளில்லை.
கூட்டணிக்கட்சிகள் ஜோரா-அட
போட்டே ஆகணும் ஜால்ரா.
இவர் மட்டும் என்ன யோக்கியம். .
பெருக்கிக்கொண்டனர் சௌபாக்கியம்.
மாநிலக்கட்சிகளை குழையாது-இங்கு
தேசியக்கட்சிகளும் நுழையாது.
அரசியல் என்னும் சகதியால்
ஆகினர் எம்மக்கள் அகதியாய்.
மக்கள் சேவை மிகத்தூயப்பணி-அது
என்றாவது அவர்கள் தலையாயப்பணி??!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக