செவ்வாய், 6 நவம்பர், 2012

மத்யமம்

ஒன்றுமில்லாமல்
எல்லாமிருப்பவர்கள் ...

எல்லாமிருந்தும்
ஒன்றுமில்லாமிருப்பவர்கள்....

இவ்விருப்பிரிவினரல்லாது

கொஞ்சமாகவாவது இருப்பதைக்
காப்பாற்றிக்கொள்ள
இயங்கிக்கொண்டிருப்பவர்களால்

உயிர்ப்புடன் இருக்கிறது உலகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக