.jpg)
அதிரடியாய் எனை கையாண்டு
அன்பை வெளிப்படுத்திய ஆண்தாய்.
தூக்கிப் போட்டு எனைப் பிடித்து
என் பயம் பறக்க வைத்தாய்.
ஞானப் பாலூட்டி எனக்கு
ஞாலம் புரிய வைத்தாய்.
வார்த்தை முள்ளால் தைத்தாய்.
வாஞ்சையோடுப் பின் அணைத்தாய்.
வேண்டியதை வாங்கித் தந்தாய்-என்னில்
வேண்டாததை நீங்கச் செய்தாய்.
பனிக் குடத்தில் தாய் பத்துமாதம் சுமந்தால்-
பணிகிட்டும் வரை சுமக்க நீ வந்தாய்.
எத்தனை பிறவி எடுப்பினும் தந்தையே
உம்மிடம் பட்ட கடன் மறக்காது சிந்தையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக