ஞாயிறு, 4 நவம்பர், 2012

எரிச்சல்களுக்கிடையில் ஓர் நேர்த்தி.

அவரிடம் தோட்டக்காரனுக்குரிய
இலாவகம் தெரிந்தது-
நீர் தெளித்து தலைக்  கோதிய போது.

இடை இடையே கண்ணாடியில்
டிவி காணும் கள்ளத்தனம் ஏதுமில்லை.

செய்யும் வேலையை பாதியில் விட்டு
செல்போன் அரட்டை செய்ய வில்லை.

சற்றேத் தள்ளி சாய்ந்துப் பார்த்து
சரியாய் குறையை
சரிசெய்துத்
தொடர்ந்தபோது வேலையை -ஆர்வத்
தீவிரம் அவர் முகத்தில் கண்டு
திகிலாய்த் தானிருந்தது.

என்ன ஒன்று -
பக்கவாட்டில் வெட்டும்போது
தோள்களின் மீது அப்படியே
 சாய்ந்துக் கொண்டதையும்
முன்மண்டையில் வெட்டும்போது
மடிமீதே அமர்ந்துக் கொண்டதையும்
ஜீரணித்துக் கொள்ளத்தான் இன்னும்
சிரமமாய் இருக்கின்றது.               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக