சனி, 3 நவம்பர், 2012

ஒட்டிக் கொள்ள ஒரு விண்ணப்பம்.


காதல் வேண்டிப் பெண்ணே உன்னிடம்
கையேந்திக் கேட்டேன் யாசகம்.
மனதைக் கலைத்துப் போட்டது பெண்ணே
மாட்டேன் என்ற உன் வாசகம்.


திரை நீ போட்டுக் கொண்டதால் மனம்
உடைந்துத் துண்டானது நேற்று.
விடுமாப்  பெண்ணே மூடியத் திரையை
விலக்காது இந்தக் காற்று.


ஆகக் கடைசியில் வந்து சேரும் 
அந்தத் திரைப் படப் போலீஸ் போல்
நானும் எட்டிடுவேன் உனை ஒட்டிடுவேன்
நகம்  நீங்கிடா  நகப் பாலீஷ்  போல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக