திங்கள், 5 நவம்பர், 2012

அது ஒரு காலம்.

முறைத்து ,குழைந்து

முண்டியடித்து
முட்டித் தேய்ந்து
தலை மேல் நடந்து

'கவுன்ட்டர்' அருகே
பாம்பாய் கீழ் இறங்கி

பண்டிகை சட்டை அன்றே
பழசாகி கிழிந்து
படம் பார்த்த
'த்ரில்'அனுபவத்தை

'நெட்டில்' பதிவு செய்து
நலுங்காமல் போய்வரும்
இந்த தலைமுறைக்கு
ஆவணப் படுத்த யாரேனும்  
ஆவன செய்துள்ளீர்களா ...

என் இந்தக் கவிதையல்லாது..??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக