காட்டில் தீர்த்து முடிக்காத
துவேஷங்கள்
கடலில் ஈடேறுகின்றன .
எவர்மீது,ஏனென்று ..
எதுகுறித்தும் கவலையில்லை -
எதிர்படுபவன் ஏமாளி
எனும்பட்சத்தில்.
வறுமைக் கோட்டைத் தாண்ட
வலைவிரிக்க வந்தவன்
எல்லைக் கோட்டைத் தாண்டினானென்று
சல்லடைக் கண்ணாய் துளைக்கப்பட்டான்.
வாழ்க்கைப் போராளிகளை
விடுதலைப் போராளிகளாக
காட்சிப் பிழையோடே
காட்டிக் கொண்டிருக்கிறது
திகிலிலிருந்து இன்னமும் மீளாத
அவர்களின் தொலைநோக்கிகள்.
உங்கள் கர்ணகடூர மொழிதான்
எச்சரிப்பதற்கு
எல்லாவிதத்திலும் பொருந்திப்போகுமே..
இருந்தும் ஏன்..??!!
தன் மரணத்தின் காரணம்குறித்த
அவன் அறியாமை வானமெங்கும்
கருமையைஅப்பியிருந்தது.
கூடியிருந்த கடலின் கரிப்புத்தன்மை
கரையிலிருந்தவர்கட்கு ஏதேனும்
விபரீதத்தை உணர்த்தியிருக்கக்கூடும்.
நீங்களோ சாட்சிகள் இல்லையென்று
நக்கலாய் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பரந்த வானும்
விரிந்த கடலும்
வேறு என்னவென்று நினைக்கிறீர்கள்...
துவேஷங்கள்
கடலில் ஈடேறுகின்றன .
எவர்மீது,ஏனென்று ..எதுகுறித்தும் கவலையில்லை -
எதிர்படுபவன் ஏமாளி
எனும்பட்சத்தில்.
வறுமைக் கோட்டைத் தாண்ட
வலைவிரிக்க வந்தவன்
எல்லைக் கோட்டைத் தாண்டினானென்று
சல்லடைக் கண்ணாய் துளைக்கப்பட்டான்.
வாழ்க்கைப் போராளிகளை
விடுதலைப் போராளிகளாக
காட்சிப் பிழையோடே
காட்டிக் கொண்டிருக்கிறது
திகிலிலிருந்து இன்னமும் மீளாத
அவர்களின் தொலைநோக்கிகள்.
உங்கள் கர்ணகடூர மொழிதான்
எச்சரிப்பதற்கு
எல்லாவிதத்திலும் பொருந்திப்போகுமே..
இருந்தும் ஏன்..??!!
தன் மரணத்தின் காரணம்குறித்த
அவன் அறியாமை வானமெங்கும்
கருமையைஅப்பியிருந்தது.
கூடியிருந்த கடலின் கரிப்புத்தன்மை
கரையிலிருந்தவர்கட்கு ஏதேனும்
விபரீதத்தை உணர்த்தியிருக்கக்கூடும்.
நீங்களோ சாட்சிகள் இல்லையென்று
நக்கலாய் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பரந்த வானும்
விரிந்த கடலும்
வேறு என்னவென்று நினைக்கிறீர்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக