ஞாயிறு, 28 அக்டோபர், 2012

ச்சீப் போ..







சிறு வயதில்
செல்லமாய் சீண்டியபோது
ச்சீப் போ என்றாய்
நாணத்தில்..

சில்மிஷமாய் காதில்

சிலவிஷயம் சொன்னபோது
ச்சீப் போ என்றாய் - காதல்
அஞ்ஞானத்தில் ..

கட்டிலறைக் காலத்தில்
கணக்கேயில்லை நீ சொன்ன
ச்சீப் போ விற்கு -காம
மோனத்தில்..

அந்திமக் காலத்தில்
அடியேய் நானே உனக்கு
ச்சீப்போ என்றாகிவிடுவது -எந்தக்
கோணத்தில்..??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக