வியாழன், 25 அக்டோபர், 2012

நடுநிசி நாய்கள்.

எப்போதாவது
நேரிட்டு விடுகிறது இந்த
நடுநிசி நாய்களை எதிர்கொள்வது.
 

வெறும் பயம் கலந்த மிரட்டலாலா
வழியில் தென்படும் கற்களாலா..
எதனால்
அவைகளை சமாளிப்பதென்பதை
அவைகள்தான் நிர்ணயிக்கின்றன.
 

கும்மிருட்டில் காலருகில்
திடீரென அவை
குலைத்தபடி நெருங்கும்போது
உச்சந்தலையில் தோன்றும் ஜில்லிப்பு
உண்மையில்
நவரத்னா எண்ணையல்லாது
நாய்களால் மட்டுமே தர இயலும்.
 

அடுத்தத் தெரு நாய்களிடம்
தம்மை ரணமாக்கிக் கொள்ளாது
அவைகள் தம்
எல்லை வந்ததும் விலகிக் கொள்வது
அந்த இருட்டிலும் நமக்கு
ஏதோ ஒரு வெளிச்சத்தை பாய்ச்சுகிறது..
 

விடாமல் அவை குரைக்கின்றன.
எனினும் அவை
விளக்கில்லா வீதியின்
வேறு சில பயங்களை குறைக்கின்றன.
 

அந்த குலைத்தலில்
நான் வேகமாக விரைகிறேன் வீடு நோக்கி..
இரவு வேகமாக கரைகிறதுவிடியல் நோக்கி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக