ஞாயிறு, 28 அக்டோபர், 2012

தேவதை வீதி.

விடியலில் கோலமிட
வாசலுக்கு அவள் வருவாளென
வெளியில் காத்திருக்கும்
எங்கள் தெருப் புள்ளிகள்.
**********    ********    ***********
வீதியில் விளையாடும்
குழந்தைகள் குறித்து
விசனமில்லை
வீட்டில் உள்ளோர்க்கு-
வேகத் தடையாய்
வாகனங்களுக்கு
அவள் வீடு இருப்பதால்.
*******     ******     ************
தபாலே வருவதில்லை
இப்போதெல்லாம்
எவருக்குமிங்கு.
எனினும்வருகிறார்
 தபால்காரர்
அவள் வீட்டில்
தண்ணீர் குடிப்பதற்கு.
*********     ******   **********
எண்ணோ,நிறமோ,வடிவமோ
எதுவுமே தேவையின்றி
அவளே அடையாளமாகிறாள்
அந்த வீட்டிற்கு.
********    ********    *********
எங்கள் தெருவில்
அனைவருக்கும் தெரிந்தது
அவள் இல்லத்தில்
 யார்யார் உள்ளார்கள் என்பது.
யாருக்கும் தெரியாதது
அவள் உள்ளத்தில்
யார் உள்ளார்கள் என்பது..
*******   **********   ***********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக