மொத ராத்திரி வேளையிலே
சீர் கொறஞ்ச சுணக்கத்துலே
பாவமுன்னுப் பாராமே
கோவமதும் கொறையாமே
செஞ்சீங்க என்கிட்டே வம்போவம்பு.
அங்கே மொனமுறிஞ்சு
மூலையிலே மன்மத அம்பு.ஆத்தா பேச்சே கேட்டு
ஆதாரம் கேட்காமே
சம்சாரம்னு பாக்காமே
சாத்தா சாத்துனீங்க-என்னை
சாத்தான்னு ஏசனீங்க.-நம்மை
சேத்துவெச்ச சாமி மொகத்தில்
சேத்தத்தான் பூசனீங்க.
பொங்கவெச்ச சோத்துலே
பொடிக் கல்லு இருந்ததுக்கும்
பொட்டப்புள்ள ரெண்டு
தொடர்ச்சியா பொறந்ததுக்கும்
விழுந்த அடிக்கு நான்
விழிநீர் வடித்ததில்லை.
பாசமன்றி வேறொன்றை-இந்தப்
பாவிமகப் படித்ததில்லை.
ஒருக்களிச்சு படுத்து
ஒன்னை நினைக்கையிலே
ஓரக் கண்ணில் வழிஞ்ச நீர்
தலையணையை நனைக்கையிலே
ஈரம்தான் ஆனதய்யா உள்ளிருந்த
இலவம்பஞ்சு..
தாரம்நான் எதிர்பார்த்தேன் அப்படியோர்
ஈர நெஞ்சு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக