சனி, 27 அக்டோபர், 2012

இருப்பை பொறுத்து..

அருங்காட்சியகத்தில் கவர்ந்ததென்னை
அவ்வளவு கலையம்சத்தோடு அது.

இறைச்சி,மீன் கடையில்,அடுக்களையில்
பசி,ருசியை தூண்டும் வேலையேப் பார்த்தது.

முதன்முதல்
நாவிதர் பிரயோகப்படுத்தியபோதும்
கலவரப்படுத்தவில்லை.

காரணமின்றி குடிபோதையில்
காற்றைக் கிழித்தவண்ணம்
கடைத் தெருவில் கலாட்டா செய்பவன்
கையில் கண்டபோது அத்தனை
அச்சுறுத்தலாயிருந்தது அது-
 
அந்த
முரடனின் முகத்தில் தாண்டவமாடிய
மூர்க்கம் அதில் பிரதிபலித்ததால் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக